tamilnadu

அலையின் சீற்றத்தால் சேதமடையும் படகுகள் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்துத் தர மீனவர்கள் வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஆக.27- தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன் பிடித் துறைமுகத்தில், அலைகளில் சிக்கி சேதமடையும் படகுகளை காப் பாற்றும் வகையில், தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என மீன வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து தமிழ் மாநில மீனவர் பேரவை பொதுச் செயலாளர் ஏ. தாஜூதீன் தமிழக அரசுக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறி யிருப்பதாவது:  “மீனவர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு சுமார் 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மல்லிப்பட்டினம் துறை முகத்தை புதிதாக அமைத்து மேம்பாடு செய்து தந்தது. அப்போது இந்தத் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு ரூ. 6 கோடி மதிப்பீட் டில் திட்டமிடப்பட்டது.  தற்போது துறைமுகம் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்பட்டு 2 ஆண்டு கள் கடந்த நிலையிலும் தூண்டில் வளைவு அமைக்கப்படாமல் உள்ளது. தூண்டில் வளைவு அமைக்கும் திட் டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  தூண்டில் வளைவு அமைக்காத கார ணத்தால், அலையின் வேகத்தால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி, உடைந்து சேதமடைந்து கடலுக்குள் மூழ்கிவிட்டது.  தற்போது இப்பகுதியில் முன்னெப் போதும் இல்லாத அளவில், கடல் காற்று அதிகமாக வீசி வருகிறது. குறிப் பாக சுனாமிக்குப் பிந்தைய கால கட்டத்தில் இந்தப் பகுதியில் கடல் பரப்பில் மிகப் பெரிய அளவில் மாற்றங் கள் ஏற்பட்டுள்ளன. இதனால், கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளது. தூண் டில் வளைவு அமைக்கப்பட்டிருந் தால், கடந்த 2018 நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் போது பலநூறு படகு கள் சேதம் அடைவதில் இருந்து காப்பாற்றப் பட்டிருக்கும். மீனவர் களுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு இருந்திருக்காது.  மாவட்ட நிர்வாகம், மீன்வளத் துறை, மீன் துறை அமைச்சர் தமிழக அரசு என பல தரப்பிலும் மீனவர்கள் இதுகுறித்து பலமுறை எடுத்துக் கூறி யும், இதுவரை எவ்வித நடவடிக்கை யும் இல்லாமல் உள்ளது. துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்ட போது, தூண்டில் வளைவு அமைப்பதும் அதன்  ஒரு பகுதியாக இருந்தது. தற்போது எத னால் அதனை கைவிட்டுவிட்டனர்.  கஜா புயலுக்குப் பிறகும் பல படகு கள் கடல் சீற்றத்தால், புதிய துறைமுக பாலத்திலேயே மோதி சேதம் அடைந்து வருகிறது. இதனால் மீனவர்களுக்கு பெரும் பொருளாதார நஷ்டம் ஏற் பட்டுள்ளது. வருகிற பருவமழை தொடங் கும் முன்பாக, மீனவர்களின் கருத்தை கவனத்தில் கொண்டு, விரைவாக திட் டமிட்டு தூண்டில் வளைவு அமைத்து தந்தால் மீனவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் களையப்படும். படகு களும் காப்பாற்றப்படும் மீனவர் களின் வாழ்வாதாரம் மேம்படும்.” இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.