தஞ்சாவூர், செப்.8- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளையின் சார்பில், ரத்ததானம் முகாம் மற்றும் இலவச மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடை பெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவரணிச் செயலா ளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்ஷா, மற்றும் கிளை தலைவர் டி.எம்.ஏ.அபூபக்கர் முன்னிலை வகித்தனர். காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டார். முகாமில் 61 யூனிட் ரத்தம் தானமாகப் பெற்று, தஞ்சை காளி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் எல்.சண்முக சுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுக்கூர் கிளை செயலாளர் ரஹ்மதுல்லாஹ், அப்துல் கரீம், ஜெ.ஹெச்.ஆசிப் அலி செய்திருந்தனர்.