தஞ்சாவூர், ஜூலை 30- தஞ்சாவூர் மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் புதன் கிழமை முதல் விடிய விடிய பெய்த மழையால் திருவிடை மருதூர் வட்டம் பழியஞ்சிய நல்லூர், வடுமாங்குடி, புளியடி, சங்கராங்குடி, எஸ்.புதூர் உள்ளிட்ட கிராமங்களில் அறுவ டைக்குத் தயார் நிலையில் இருந்த சுமார் 110 ஏக்கர் கோடைப் பருவ நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அதே போல் திருக்காட்டுப்பள்ளி, விண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கர் நெற்கதிர் மூழ்கியது. இதுகுறித்து பழியஞ்சிய நல்லூர் விவசாயிகள் கூறியதா வது: பழியஞ்சியநல்லூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கோடைப் பருவ நெல்லாக ஆடுதுரை 43 ரக நெல்லை சாகுபடி மேற்கொண்டு வந்தோம். ஏக்கருக்கு குறைந்தது ரூ. 20,000 செலவு செய்துள்ளோம். அனைத்து பயிர்களும் அறு வடைக்குத் தயாரான நிலையில் இருந்தது.
இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் அறுவடை நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. இப்பகுதியில் மழை நீர் வடிந்து செல்ல அ பிரிவு வடிகால் வாய்க் கால் உள்ளது. இதை நூறு நாள் வேலை திட்டத்தில் செடி, கொடி கள் மட்டும் அகற்றப்படும். ஆனால், தூர்ந்துபோய் மேடாக உள்ள இந்த வாய்க்காலை முறை யாகத் தூர்வாரப்படாததால் நீரோட்டம் பாதிக்கிறது. இத னால், மழை பெய்தால் வயல்க ளில் தேங்கும் தண்ணீர் வடிந்து செல்ல வாய்ப்பில்லாமல் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு க்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், வடிகாலை உடனடி யாக சீரமைக்க வேண்டும்” என்றனர். மேலும் பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம் பகுதியில் அறுவடை செய்த நெல் மணிக ளை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் அப்பகுதி கொள் முதல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு இடப் பற்றாக்குறை காரணமாக நெல் குவியல்கள் வெளியே சாலை ஓரத்தில் திறந்த வெளியில் கிடக் கின்றன.
தொடர் மழையாலும், தூற லாலும் நெல் மணிகள் நனைந்து வருகின்றன. மாவட்டம் முழுவதும் தற்போது மழை காரணமாக நெல்லின் ஈரப்பதம் அதிக ரித்துள்ளது. அதனை காயவைத்து மீண்டும் விற்பனை செய்ய விவ சாயிகள் கொள்முதல் நிலை யங்களில் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.