tamilnadu

வாழை விலை வீழ்ச்சி : விவசாயிகள் கடும் பாதிப்பு

தஞ்சாவூர், நவ.14- வாழைப் பயிர் விவசா யம் செய்து உள்ள விவசாயி கள் விலை வீழ்ச்சியினால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு, மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை தலை யிட்டு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.  தஞ்சையில் வியாழக்கிழ மையன்று நடைபெற்ற விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தஞ்சை வருவாய் கோட்டாட் சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி உள் ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி கூடுதலாக செய்யப் படுகிறது. விளைந்து முற்றிய நிலையில் உள்ள பூவன் வாழைத்தார் கடும் விலை வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதனால் விவ சாயிகள் வாழைத்தார் வெட்ட முடியாமல் உள்ளனர். வாழைப்பழமும் உதிர்ந்து விடுகிறது.  விவசாயிகளுக்கு வாழை விவசாயத்தால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மன உளைச்ச லுக்கு ஆளாகியுள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர். எனவே தமி ழக அரசு, மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை தலை யிட்டு வாழை விலை வீழ்ச்சி யால் பாதிக்கப்பட்டுள்ள விவ சாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுத்து, விவசாயிகளின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.