தஞ்சாவூர், ஜூன் 10- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்தி ரன்- ராஜகுமாரி. இவர்களது பேரனும், கயல்விழி என்பவ ரின் மகனான 4 வயது சிறுவன் திவ்யதர்ஷன் 50 நாடுகளின் தலைநகரங்கள், திருக்குறளில் 133 அதிகா ரங்கள்,193 நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயர்கள், மகாபாரதத்தில் கௌரவர்களின் 60 பேரின் பெயர்கள் ஆகியவற்றை மிக வேகமாக கூறி ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் தடம் பதிக்கும் உலகச் சாத னையில் ஈடுபட்டான். பட்டுக் கோட்டை காவல் ஆய்வா ளர் பெரியசாமி தலைமை யில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், நடுவர்கள் முன் ்னிலையில் இச்சிறுவன் சாதனையை புரிந்து விருது பெற்றான். இதில் 100 திருக்குறளை 4 நிமிடம் 41 வினாடிகளி லும்,193 நாடுகளின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை 2 நிமிடம் 26 நொடிகளிலும், 60 கௌரவர்களின் பெயர் களை 31 நொடிகளிலும், 118 தனிமங்களின் பெயர்களை 1 நிமிடம் 20 நொடிகளிலும், 50 ஆசிய நாடுகளின் பெயர்கள் 37 நொடிகளிலும் கூறி சாதனை படைத்தான். இதையடுத்து சாதனை சிறு வனுக்கு காவல் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் ஜேசிஈ மண்டல தலைவர் வெங்க டேஷ் பதக்கங்கள் மற்றும் சீல்டுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கி கௌ ரவித்தனர்.