tamilnadu

img

4 மாதமாக உதவித்தொகை கிடைக்காமல் தவிப்பு மாற்றுத்திறன் சகோதரிகளுக்கு உதவிய ஆட்சியர்

தஞ்சாவூர், மே 6- தஞ்சாவூர் மாவட்டம் பே ராவூரணி அருகே பெருமக ளூர் கே.ஆர்.புரத்தைச் சேர்ந்தவர்  மாற்றுத்திறனாளி திவ்யசிலோன்மணி (55).  இவரது சகோதரி மல்லிகா வும் மாற்றுத்திறனாளி. இருவ ரும் தனியாக வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு வேறு எந்த ஆதரவும் கிடை யாது.  இவர்களில் திவ்ய சிலோன்மணிக்கு மட்டும் மாற்றுத்திறனாளிகள் உத வித்தொகை கடந்த 30ஆண்டு களாக வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக உதவித் தொகை வரவில்லை. உடல்  நலிவுற்ற நிலையில் ஊர டங்கு நேரத்தில் சகோதரிகள் இருவரும் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் மிகுந்த சிரமத்தில் இருந்தனர். இது  குறித்து பத்து ரூபாய் இயக்க  தஞ்சை மாவட்ட செயலாளர் கே.சீனிவாசன் வாட்ஸ்அப் மூலம் செவ்வாய்க்கிழமை ஆட்சியர் ம.கோவிந்த ராவுக்கு புகார் அனுப்பியி ருந்தார்.  அன்று மதியமே பெரும களூர் வங்கிக் கிளையிலி ருந்து அலுவலர்கள் திவ்யசி லோன்மணி இல்லத்திற்கு நேரில் சென்று நிலுவைத்  தொகை ரூ. 4 ஆயிரத்தை  வழங்கினர். மாற்றுத்திற னாளியின் துயர் தீர்த்த ஆட்சி யருக்கு கிராம மக்கள் நன்றி  தெரிவித்தனர்.

;