tamilnadu

img

எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு நூற்றாண்டு விழா

 கும்பகோணம், ஆக.7- மறைந்த எழுத்தாளர் கரிச்சான்குஞ்சுவின் நூற்றாண்டு விழா இலக்கிய அரங்கம் கும்பகோணத்தில் நடை பெற்றது. சாகித்ய அகாதெமியும், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையமும் இணைந்து நடத்திய இவ்விழாவில் நூலக மேலாண்மை இயக்குநர் எஸ்.தயாளன் வரவேற்றார். சாகித்ய அகாதெமி குழு உறுப்பினர் பேராசிரியர் இராம. குருநாதன் பேசுகையில், “கரிச்சான் குஞ்சுவின் எழுத்தாற்றல், அவரது படைப்புகள் பலவும் எதார்த்த தன்மை வாய்ந்தவை. பல வகையான பாத்திரப் படைப்பு களையும் உணர்ச்சியுடன் கூடிய ஓவியங்களையும் அவர் பயன்படுத்தியுள்ளார் என்றார். ஆவணப்பட இயக்குநர் ரவிசுப்பிரமணியன் “கரிச்சான் குஞ்சுவோடு பழகிய காலங்களை” பகிர்ந்து கொண்டார். கவிஞர் ராணிதிலக் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட கரிச்சான் குஞ்சுவின் சிறுகதைத் திறனைப் பற்றி பேசினார். நூல் விமர்சகர் சு.சாமிநாதன் கரிச்சான்குஞ்சுவின் பசித்த மானிடம் நாவலைக் குறித்துத் தம் கருத்தை முன்வைத்தார். விழாவில் கரிச்சான் குஞ்சுவின் மகள் பிரபா, ஆங்கில பேராசிரியர் சங்கரநாராயணன் ஆகி யோர் உரையாற்றினர். இந்த இலக்கிய கூட்டத்தில் ஏராள மான எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வ லர்கள், நூலக வாசகர்கள் கலந்து கொண்டனர்.