tamilnadu

img

சீனிவாச பெருமாள் கோவிலில் திருடு போன 3 உலோகச் சிலைகள் மீட்பு

கும்பகோணம், மார்ச் 12-  கும்பகோணம் அருகே சீனிவாச பெருமாள் கோவிலில், திருடு போன 3  உலோகச் சிலை மற்றும் வெள்ளி பொரு ட்களை மீட்டு தம்பதி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகே ாணத்தை அடுத்த திருப்புறம்பியம் தெற்கு வீதியில் ஆதிதாசப்ப நாயுடு பரம்பரைக்கு சொந்தமான 200 ஆண்டு பழமையான சீனிவாசபெருமாள் கோ வில் உள்ளது. கடந்த மார்ச் 10 அன்று இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம  நபர்கள், கோவில் அர்த்த மண்டபத்தின்  கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.  கருவறை மண்டபம் மற்றும் பத்மா வதி தயார் கருவறை சன்னதி ஆகிய கத வின் பூட்டை உடைத்து, அங்கிருந்த, அரை அடி உயரமுள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் உலோகச்சிலை, ஒன்றரை யடி உயரமுள்ள ஸ்ரீ பத்மாவதி தயார் உலோகச்சிலை, முக்கால் அடி உயர முள்ள ஸ்ரீ விஷ்வக்‌ஷேணர் உலோ கச்சிலை, தலா ஒன்று வெள்ளிச்சடாரி, வெள்ளி கவசம், வெள்ளிதட்டு, வெள்ளி கிரீடம் ஆகியவற்றை திருடி சென்றனர். மறுநாள் மாலை பராங்குசம் என்பவர், பூஜை செய்வதற்காக கோவிலை திறந்த போது,  பொருட்கள் சிதறி  கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக கோவில் நிர்வாகி பாலாஜி என்பவர், சுவாமிமலை போ லீசில் அளித்த புகாரின் அடிப்படை யில், கும்பகோணம் டி.எஸ்.பி., ஜெய சந்திரன் தலைமையில், சப்–இன்ஸ்பெ க்டர் கீர்த்திவாசன் குழுவினர், சென்னை,  காஞ்சிபுரம், தேனி, கம்பம் உள்ளிட்ட மாவட்டங்களில் பழைய சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.  இந்நிலையில், செவ்வாயன்று போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவ லின்படி கும்பகோணம் கணபதி நகரை சேர்ந்த ராமலிங்கம்(46) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசா ரணையில், ராமலிங்கம் சிலை கடத்த லுக்கு மூளையாக செயல்பட்டதும், அவ ரது நண்பர் தஞ்சாவூர் பொட்டுவாச்சாவ டியை சேர்ந்த மெல்வின் சகாயராஜ் (40), ராமலிங்கத்தின் மனைவி ராசாத்தி (35), அவரது மகன்  கமல்ராஜ்(20) உள்ளி ட்டோரும் சிலையை திருடியது தெரிந்தது. இதையடுத்து புதனன்று அதிகாலை  வீட்டில் பதுங்கி இருந்தவர்களை கைது  செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த மூன்று சிலை மற்றும் வெள்ளி  பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.