தஞ்சாவூர், ஆக.1 - பேராவூரணி அரசு மருத்துவமனை யிலேயே கொரோனா பரிசோதனை வசதி தொடர வேண்டும். மேலும், போதிய அளவில் பரிசோதனைக் கருவி களை வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணியில் காமராஜர் அரசு மருத்துவ மனை உள்ளது. இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்க ணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்வது வழக்கம். இங்கு, செயற்கை சுவாசக் கருவி யுடன் கூடிய, கொரோனா சிறப்பு சிகி ச்சைக்காக 15 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனா லும் கொரோனாத் தொற்று கண்டறி யப்பட்டவர்கள், பட்டுக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள சிகி ச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகி ச்சை அளிக்கப்படுகிறது. தற்போது கடந்த சில நாட்களாக பேராவூரணி பகுதியில் கொரோனாத் தொற்று அதிகம் பரவி வருகிறது. இதையடுத்து பேராவூரணி அரசு மருத்துவமனையில், கொரோனா சளிப்பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு முறையும் சுமார் 50 லிருந்து 60 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, இரண்டு நாட்களில் முடி வுகள் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக தினசரி 5-க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே, சளிப் பரிசோதனை செய்ய ப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது, பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள் மற்றும் அதிக காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் அறிகுறி களுடன் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த ஒரு வார காலத்தில், பேரா வூரணி எம்எல்ஏ மா.கோவிந்தராசு தொடங்கி சுமார் 20-க்கும் மேற்பட்டோ ருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பழைய பேரா வூரணியைச் சேர்ந்த 80 வயது நபர் ஒரு வர் வியாழக்கிழமை புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். கொரோனாத் தொற்று பாதிக்கப்ப ட்டுள்ள நபர்களின், உறவினர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் கொ ரோனா சளிப்பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வரு கின்றனர். ஆனால், பேராவூரணி அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்து வமனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு தற்போது போதிய அளவில் பரிசோதனைக் கருவிகள் வருவ தில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பேராவூரணி அரசு மருத்து வமனைக்கு பரிசோதனைக்கு சென்றால், சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ, அழகிய நாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கோ செல்லும்படி அலைக்கழி க்கப்படுகின்றனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், “எனது கணவ ருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு 4 தினங்களாக பட்டுக்கோ ட்டை சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகி ச்சை பெற்று வருகிறார். எனக்கும், என்னு டைய மகள்களுக்கும் பரிசோதனை செய்ய, செருவாவிடுதி வருமாறு அழை த்தனர். 13 கி.மீ தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல ஆட்டோ, வாடகைக் கார் ஓட்டுநர்கள் வருவதற்கு அச்சப்படுகின்றனர். ஆகை யால் பேராவூரணி அரசு மருத்துவமனை யிலேயே கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மாவட்டம் முழுவதும், அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, சளிப்பரிசோதனை செய்ய போதிய அளவில் பரிசோத னைக் கருவிகளை அரசு வழங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.