தஞ்சாவூர், அக்.17- ஒவ்வொரு தனி மனி தரும் தன்னுடைய கை களை சுத்தமாக பராம ரிப்பதின் மூலம் நோய் பரவுதலை தவிர்க்க முடியும். தஞ்சை மீனாட்சி மருத்துவமனை, தாமரை இண்டர்நேஷனல் பள்ளி மற்றும் தஞ்சாவூர் கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் உலக கைகழுவும் தின விழிப்பு ணர்வு நிகழ்ச்சி அக்.15ஆம் தேதி நடைபெற்றது. தாமரை இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பள்ளி தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மைக்ரோபயாலஜி துறை சிறப்பு மருத்துவர் டாக்டர் ஷாலினி கை கழுவும் முறை குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கமளித்தார். சுமார் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி யருக்கு டாக்டர் ஷாலினி பரிசுகள் வழங்கினார். தாமரை இண்டர்நேஷ னல் பள்ளி முதுநிலை முதல்வர் கணேசன் நன்றி கூறினார்.