தஞ்சாவூர், செப்.7- தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் வரும் செப்.10 முதல் 14 வரை கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 200 கலைஞர்கள், 30 க்கும் மேற்பட்ட கலைக்குழுவினரும் கலந்து கொள்ள உள்ளனர். ஐந்து நாட்கள் நடை பெறும் நிகழ்ச்சியில் 10ஆம் தேதி இசை நிகழ்ச்சி, 11 ஆம் தேதி நாட்டுப்புற மற்றும் பழங்குடி கலைகள், 12 ஆம் தேதி நடனம், 13 ஆம் தேதி பொம்ம லாட்டம், இதர பாரம்பரியம், 14 ஆம் தேதி நாடகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.