தஞ்சாவூர், செப்.17- தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திங்கள்கிழமை அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலை பண்பாட்டுத் துறை சார்பில் கலைஞர்களுக்கு கலை விருது வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 10 கலைஞர்களுக்கு, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் மூலம், விலை யில்லா இசைக்கருவிகள் வாங்கிட தலா ரூபாய் பத்தாயிரம் வீதம் மொத்தம் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலைகளையும், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகம் மூலம் முதலமைச்சர் விபத்து நிவாரணத் தொகை திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் மொத்தம் 2 லட்சத்திற்கான காசோலைகளையும், மாவட்ட கலை மன்றம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 5 கலைஞர்களுக்கு கலை விருதுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.