தஞ்சாவூர் அக்.6- தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லறிவியல் துறை சார்பாக வியாழன் அன்று “தமிழ் இலக்கியங்களில் தொல்லறிவியல் சிந்தனைகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் பல்கலை க்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக துறைத்தலைவர் முனைவர் ந.நாகராஜன் வரவேற்றார். அறிவியல் புல முதன்மையர் முனைவர் க.சங்கர் வாழ்த்திப் பேசினார். திருச்சி தேசியக் கல்லூரி தமிழாய்வுத்துறை முனைவர் ச.நீல கண்டன், விளாங்குடி புலவர் ம.மருதமுத்து ஆகியோர் பேசி னர். உதவிப் பேராசிரியர் முனைவர் இரா.சீனிவாசன் நன்றி கூறினார்.