தஞ்சாவூர், ஜூன் 5 -தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 590 மதிப்பெண் பெற்ற மாணவர் சந்தோஷ், 587 மதிப்பெண் பெற்ற மாணவி பூர்வஜா, 582 மதிப்பெண் பெற்ற மாணவி மோனிஷா மற்றும் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 500-க்கு 492 மதிப்பெண் பெற்ற மாணவர் நிரஞ்சன், 491 மதிப்பெண் பெற்ற மாணவர் வீரகவி, மாணவி சோபியா, ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சாதனை மாணவர்களுக்கு பள்ளித் தாளாளர் டி.சுவாமிநாதன், செயலாளர் ஜெ.சரவணன் ஆகியோர் பொன்னாடை அணிவித்தும் பரிசு கொடுத்தும் கவுரவித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி இயக்குநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.