தஞ்சாவூர், மே 12- விவசாயத் தொழிலாளர் குடும்பங்க ளுக்கு, ஊரடங்கால் வேலை இழந்த காலத் திற்கு, மாதம் ரூ.7,500 வீதம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை தனிநபர் இடைவெளி யை கடைபிடித்து ஊராட்சி தலைவர்களிடம் மனுக்கள் அளிக்கும் போராட்டம் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற போராட் டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருமலைசமுத்திரம் ஊராட்சியில், விதொச ஒன்றியத் தலைவர் ராமராஜ் தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில், மாநிலச் செயலாளர் எம்.சின்னத் துரை, மாவட்டப் பொருளாளர் கே.அபி மன்னன், வி.ச ஒன்றியச் செயலாளர் சௌந் தர்ராஜன், மாற்றுத் திறனாளிகள் சங்கம் பி.சங்கிலி முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரெட்டிப்பாளையத்தில் சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் எம்.மாலதி, நாகத்தியில் விதொச ஒன்றிய துணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார், மாத்தூர் ஊராட்சியில் ஏ. அமுல்ராஜ் கலந்து கொண்டனர். 600 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் அளிக்கப் பட்டன. அம்மாபேட்டை ஒன்றியம், இராராமுத்தி ரைக்கோட்டை, நெல்லித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின், தஞ்சை மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, சிபிஎம் மாவ ட்டக்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி உள்ளிட்டோர் ஊராட்சித் தலைவர் சோழன், ஊராட்சி செயலாளர் அசோக் ஆகி யோரிடம் 81 மனுக்களை அளித்தனர்.
சேதுபாவாசத்திரம்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மணக் காடு உள்ளிட்ட இடங்களில் ஊராட்சி தலை வர்களிடம் 200 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. கட்சி மாவட் டக்குழு உறுப்பினர் வி.கருப்பையா, ஒன்றி யச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூதலூர் தெற்கு ஒன்றியம், பூதலூர் வெண்டயம்பட்டி, பூதலூர், புதுக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், விதொச நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 500 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் ஊராட்சித் தலைவர்களிடம் அளிக்கப்பட்டன.
பூதலூர் வடக்கு
பூதலூர் வடக்கு ஒன்றியம் முல்லைக் குடி, மாரனேரி உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வெ.ஜீவகுமார், கட்சி ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, நிர்வாகி கள் கலந்து கொண்டனர். 200 க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன. திருவோணம் ஒன்றியம் வெட்டுவா கோட்டை, பாதிரங்கோட்டை வடக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். விதொச மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே. ராமசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.கோவிந்தராசு, விதொச ஒன்றிய தலை வர் எஸ்.பாஸ்கர், ஒன்றியச் செயலாளர் ஆர்.சின்னப்பா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாமிநாதன் கலந்து கொண்டனர். இதே போல் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை கேட்கும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.