tamilnadu

img

அரசு வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதை ரத்து செய்யக் கோரி போராட்டம்

கும்பகோணம், மே 13- அரசு வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயதினை 58 லிருந்து 59-ஆக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை அழிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்ட அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக ளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக மாநி லம் தழுவிய அளவில் வயிற்றில் ஈரத்துணியை கட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை  மாவட்டம் குடந்தை ஒன்றியம் தேவனஞ்சேரி பகுதி கிளையில் வாலிபர் சங்கம் சார்பாக கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி தனி மனித இடைவெளியுடன் போரா ட்டம் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் க.ராமன், குடந்தை ஒன்றிய தலைவர் குரு.தமிழி னியன், பிரபாகரன், திவாகர், விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி
நாகை மாவட்டம் செம்ப னார்கோவில், திருக்கடையூர் பகுதி களில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். செம்பனார் கோவில் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் சிங்காரவேலன் உரையாற்றி னார். திருக்கடையூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலை வர் வீ.எம்.சரவணன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணைத்தலைவர் ஏ.ரவிச்சந்திரன், குணசுந்தரி, அய்யப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.