தஞ்சாவூர், ஆக.5- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூ ரணி அடுத்த நாடியம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் வளர்ச்சியை மீட்டெடுக்க வேண் டும் என இளைஞர்கள் முடி வெடுத்து, அவ்வூரைச் சேர்ந்த, சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களில் வேலை செய்வர்களுக்கும் தகவல் கொடுத்து கிராமத்திற்கு வரவழைத்தனர். இதையடுத்து கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவி லில் அனைவரும் ஒன்று கூடினர். அங்கு ஊர்க்கூட்டம் நடைபெற் றது. அவர்களில் ஒருவராக அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வ னும் இளைஞர்களின் அழைப்பை ஏற்று வந்திருந்தார். கூட்டத்தில், கிராமத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்வது என அனைவரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் கிராமத்தின் வளர்ச்சிக் காக முதலில் நமக்கு விவசாயத்திற் கும், குடிக்கவும் தண்ணீர் வேண் டும். அதற்காக நம் ஊரில் உள்ள 340 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாடி யம் பெரிய ஏரியையும் மற்றும் 100 ஏக்கர் பரப்பளவுள்ள 2 ஏரிகளை யும், 7 குட்டைகளையும் மீட்டு தூர் வார வேண்டும் என முடிவு செய்யப் பட்டது. மேலும் நாடியம் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். அதற்கு தேவையான கட்டமைப்பு பணி களை செய்ய வேண்டும் உள்ளிட் டவை தீர்மானங்களாக நிறை வேற்றினர். அதற்கான நிதி ஆதார மாக, முத்துமாரியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் விழாவில் நடை பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சி களை ரத்து செய்துவிட்டு, அதற் கான தொகையை கொண்டு நீர் நிலை, பள்ளி, கிராம வளர்ச்சிக் காக செலவிட வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டன. இறுதியாக அத்தனை வளர்ச்சிப் பணிகளை யும், இளைஞர்களையும் சீரழிக்கும் டாஸ்மாக் மதுக்கடையை நாடியம் ஊராட்சி எல்லைக்குள் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க கூடாது எனவும் தீர்மானங்களை நிறைவேற்றினர். மேலும் தீர்மானத்துடன் நின்று விடக் கூடாது என்பதால் முதல்கட்ட மாக வரும் 10 ஆம் தேதி முதல் நீர்நிலை சீரமைப்பு பணிகளை தொடங்க உள்ளனர். நாடியம் கிராம இளைஞர்களின் இந்த தீர்மா னம் அருகில் உள்ள கிராமங்களுக் கும் பரவியதால் அவர்களும் கிரா மக் கூட்டத்திற்கு தயாராகி வரு கிறார்கள்.