தஞ்சாவூர், நவ.19- தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே இராராமுத்திரைக்கோட்டை கிராமத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு புதிய கிளையின் செயலாளர் முத் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் முன்னி லையில் ஆர்.நாகராஜன், சேகர், கே.முனியாண்டி, எஸ்.காசி நாதன், எஸ்.சிவகுமார், கோபால்சாமி, ராமலிங்கம், செல்வ குமார், நாச்சியம்மாள், சண்முகசுந்தரம், எஸ்.கார்த்திகே யன், எஸ்.தினேஷ் குமார், எஸ்.நடராஜன், என்.செல்வ வேல், எஸ்.தங்கராசு, பி.பாஸ்கர் உள்ளிட்ட 20 குடும்பங்க ளைச் சேர்ந்த 50 பேர் வெவ்வேறு கட்சிகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்று, துண்டு அணிவித்து கட்சியின் அமைப்பு, செயல் திட்டங்கள் குறித்து மாவட்டச் செயலா ளர் கோ.நீலமேகம் விளக்கிப் பேசினார். நிகழ்வில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றியச் செயலா ளர் ஏ.நம்பிராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முனியாண்டி, கிளைச் செயலாளர் கணேசன், பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டன