தஞ்சாவூர், டிச.18- தஞ்சாவூர் மாவட்டம் மதுக் கூர் ஒன்றியம் ஓலையக் குன்னம் ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பிற்கு சிபிஎம் மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம், வாட்டாகுடி உக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் பொ றுப்பிற்கு எஸ்.ரெத்தினம், மதுக்கூர் ஒன்றியக்குழு வார் டில் (கருப்பூர், புலவஞ்சி, அண் டமி ஆகிய பகுதிகளை உள் ளடக்கியது) கோ.சுதாகர் ஆகியோர் போட்டியிடு கின்றனர். இதேபோல் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு ஏராளமானோர் சிபிஎம் சார்பில் போட்டியி டுகின்றனர். வேட்பு மனு தாக்க லின் போது, கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினரும் மாதர் சங்க மாவட்டத் தலைவருமான ஆர்.கலைச்செல்வி மற்றும் நிர் வாகிகள் உடனிருந்தனர்.