tamilnadu

img

ஐசிசி டி-20 உலகக்கோப்பை நடக்குமா? நாளை முடிவு தெரியும்... 

துபாய் 
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் (ஐசிசி) டி-20 உலகக்கோப்பை தொடரின் 7-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் படி கடந்த ஆண்டே அட்டவணை வெளியிடப்பட்டது. 

தற்போது உலகை மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தாக்கம் காரணமாக ஒலிம்பிக்  உட்பட பல்வேறு சர்வதேச விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரும் ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. 

இதுதொடர்பான முடிவு நாளை (திங்கள்) தெரியும். ஐசிசி உறுப்பினர்களின் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில்  டி-20 உலகக்கோப்பை தொடர்பாக விவாதத்துடன் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

;