கொதிக்கும் ஆன்லைன் ஆர்மிகள்
இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் தோனி தனக்கு வழங்கப்பட்ட கவுரவ ராணுவ பொறுப்பான பாராசூட் லெப்டினெண்ட் கர்னல் பிரிவில் பணியாற்ற சிறப்பு விடுப்பு மூலம் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 106 டி.ஏ படையினருடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் தோனி ஆகஸ்ட் 15-ஆம் தேதி லே, லடாக் பகுதிகளில் சுதந்திர தினத்தன்று இந்தியத் தேசிய மூவர்ணக்கொடியை ஏற்றவுள்ளார். காஷ்மீரீல் அரசியல் சாசனம் அவமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் தேசிய கோடியை ஏற்றுவதை விரும்பாத ஆன்லைன் ஆர்மிகள் தோனியை எண்ணெய் ஊற்றாமல் வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.