tamilnadu

img

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்... 

லண்டன் 
கொரோனா பதற்றத்துக்கு இடையே கடந்த மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்ற இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இந்த டெஸ்ட் தொடர் நினைவு பெற்று ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  டெஸ்ட், டி-20 என 2 விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 
இந்த சுற்றுப்பயணத்தின் முதல் அம்சமான 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் மான்செஸ்டரில் நாளை (புதன்) மதியம் 3:30 மணிக்கு (இந்திய நேரம்) தொடங்குகிறது.இந்த தொடர் கொரோனா பரவலால் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டாலும், இந்த சமயத்தில் கிரிக்கெட் தேவை தான என பல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் குமுறுகின்றனர். 

;