tamilnadu

img

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம்

சீனாவில் நடைபெற்றுவரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை விளையாட்டுப்(International Shooting Sports Federation) போட்டியில் இந்தியாவின் கலப்பு இரட்டையர் பிரிவினர் தங்கம் வென்றனர்.


சீனாவில் நடைபெற்றுவரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதலில் பிஸ்டல் பிரிவில் வளர்ந்து வரும் இளம் வீராங்கனை மானு பாக்கர்(17) மற்றும் துப்பாக்கி சுடும் வீரர் சௌரப் சௌத்ரி ஆகியோர் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் அவர்களின் ஜோடி தங்கம் வென்றது.


இதற்கு முன்பு நடந்த மகளிர் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டியில் மானு பாக்கர் தோல்வியடைந்தார். இதனால் அவர் வரும் 2020 டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை இழந்தார்.


;