இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தற்போதைய தேர்வு குழு தலைவராக முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே. பிரசாத் உள்ளார். எம்.எஸ்.கே. பிரசாத்தின் பதவிக்காலம் இந்தாண்டு இறுதியில் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் சுழற்பந்து வீர ரும், தமிழகத்தை சேர்ந்தவருமான எல். சிவராமகிருஷ்ணன் நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேவங்காந்தி, ககன் கோடா, ஜதின் பரஞ்பே, சரன்தீப் சிங் ஆகிய 4 பேர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக உள்ள னர். தேர்வுக்குழு உறுப்பினர்களில் தேவங்காந்தி, ஜதின் பரஞ்பே, சரன்தீப் சிங் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்தாண்டு வரை இருப்பதால் ககன் கோடா இடத்தில் மட்டும் புதிய உறுப்பி னர் நியமிக்கப்படவுள்ளனர். பிசிசிஐ-யின் வருடாந்திர பொதுக் குழு கூட்டம் டிசம்பர் 1-ஆம் தேதி நடக் கிறது. இந்த கூட்டத்தின்போது புதிய தேர்வுக்குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் சம்பளப்படி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் விவா தித்து முக்கிய அறிவிப்புகள் வெளி யாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.