tamilnadu

img

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்து வரும் முகமது ஷமிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பாராட்டு.... 

லக்னோ 
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷமி இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து இன்று வரை அவர் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். பிரதமர் நிவாரணத்துக்கு நிதிக்கும் நிதி வழங்கியுள்ளார். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடும் சிரமத்தைச் சந்தித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தற்போது உதவிகளைச் செய்து வருகிறார். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திரும்பியவர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும்  முகக்கவசங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். முகமது ஷமியின் இந்த செயலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பாராட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

;