tamilnadu

img

இத்தாலி ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் நவோமி ஒசாகா, பெடரர், நடால், ஜோகோவிக்

இத்தாலியில் நடைபெறுவரும் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 16 பேரை உள்ளடக்கிய காலிறுதியில் உலகின் முன்னணி வீரர்களான நவோமி ஒசாகா, பெடரர், நடால் மற்றும் ஜோகோவிக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.


உலகின் முன்னணி டென்னிஸ் தொடர்களில் ஒன்றாக கருதப்படும் இத்தாலி ஓபன் தொடரில் உலக தர வரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நவோமி ஒசாகா ரூமேனியா நட்டு வீராங்கனை மிஹாலா புசார்னெஸ்குவை 6-3, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து 8 பேர் கொண்ட முதல் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.


இதைத்தொடர்ந்து, உலக தரவரிசையில் 3ம் இடத்திலுள்ள சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வீரர் ரோஜர் பெடரர் குரோசியா நாட்டு வீரர் போர்னா கோரிக் என்பவரை 2-6,6-4 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.


இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேட்ரிட் ஓபன் பதக்கத்தை வென்ற செர்பிய நாட்டு வீரர் நோவாக் ஜோகோவிக் ஜெர்மனி நாட்டு வீரர் பிலிப்பை 6-3 மற்றும் 6-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.


மேலும், ஸ்பெயின் நாட்டு வீரர் ரபேல் நடால் ஜார்ஜியா நாட்டு வீரரான நிகோலஸ் பசிலாஸ்வில்லை 6-1 மற்றும் 6-0 என்ற செட் கணக்கில் அதிக ஆதிக்கத்துடன் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

;