tamilnadu

img

ஏடிபி 24 டென்னிஸ் அரையிறுதியில் ஆஸ்திரேலியா

டென்னிஸ் உலகில் சிறந்த விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய 24 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி டென்னிஸ் தொடர் (ஆடவர் - ஒற்றையர், இரட்டையர் மட்டும்) கடந்த 3-ஆம் தேதி ஆஸ்திரேலிய நாட்டின் பிரிஸ்பேன் நகரில் தொடங்கியது. இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் அனைவரும் அதிரடிக்குப் பெயர் பெற்றவர்கள் என்பதால் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்று வருகிறது.      புதனன்று நாக் அவுட் சுற்று நிறைவு பெற்ற நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, ரஷ்யா, செர்பியா, கனடா, பெல்ஜியம், ஸ்பெயின் ஆகிய நாடுகள் காலிறுதிக்கு முன்னேறின. வியாழனன்று தொடங்கிய முதல் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

இன்றைய காலிறுதி ஆட்டங்கள்

செர்பியா - கனடா (3-வது காலிறுதி)
இடம் : சிட்னி / நேரம் : பிற்பகல் 3:30 மணி

பெல்ஜியம் - ஸ்பெயின் (4-வது காலிறுதி) 
இடம் : சிட்னி / நேரம் : இரவு 11 மணி  

அர்ஜெண்டினா - ரஷ்ய அணிகள் மோதிய 2-வது காலிறுதி ஆட்டத்தில் ரஷ்ய  அணி 1-0 (மாலை 5 மணி நிலவரம்) என்ற கணக்கில் முன்னிலையிலிருந்தது.

;