ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் சுமார் 175 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற கப்பல், ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்தை பிப்ரவரி.3-ஆம் தேதி வந்தடைந்தது. சீனாவில் இருந்து கரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், கப்பலில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்ற அச்சத்தில், கப்பலை ஒக்காஹாமா துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. கப்பலில் இருந்தவர்கள், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதன்படி முதலில் 60 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது, 175 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.