சேலம், செப்.4- கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்தக்கோரி பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள் மீது மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா நோய்த்தொற்று காரணமாக அரசால் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதால் தனியார் பள்ளிகள் 100 சதவிகித முழுக் கல்விக் கட்டணத்தை செலுத் தக்கோரி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களைக் கட்டா யப்படுத்தக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நி லையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையினை மீறி முழுக் கல்விக் கட்டணம் (100 சதம்) செலுத்தக்கோரி கட் டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள் மீதான புகார்களை ceosalemfeescomplaint@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார். இதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் schooleducation tiruppur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும், நீலகிரி மாவட்டத்தில் ceonilgirisfeecomplain@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் புகார் தெரிவிக்கலாம் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.