tamilnadu

காபி செடிகளில் வெள்ளை தண்டு துளைப்பான் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்

ஏற்காடு, ஆக.18- ஏற்காட்டில் உள்ள காபி செடி களில் வெள்ளை தண்டு துளைப் பான் நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் குறித்து  காபி வாரிய அதிகாரி விளக்கமளித் துள்ளார். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள 67 மலைக் கிராமங்களில் 5,876 ஹெக்டேர் பரப்பில் காபி  பயிரிடப்பட்டுள்ளது. இந் நிலையில் காப்பி செடிகளில் வெள்ளை தண்டு துளைப்பான் எனும் நோய் பரவும் காலம் துவங்கி யுள்ளதால், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் ஸ்ரீதேவி தெளிவுபடுத்தியுள்ளார். இதன்படி, “ காபி வெள்ளை தண்டு துளைப்பான் குளிர் காலம் மற்றும் கோடை காலம் என இருவிதமான பறக்கும் காலங்களை கொண் டுள்ளது. அவற்றில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான குளிர் கால பறக்கும் காலம் என்பது முக்கி யத்துவம் வாய்ந்தது. அப்போது  முதிர்ந்த பூச்சிகள் வெளிவரு கின்றன. அவற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்துவதற்கு இது உகந்த காலமாகும். கடந்த வருடம் பருவ மழையானது, முன் கூட்டியே முடிவு பெற்றதால்,  நீண்ட  வறண்ட காலநிலை நிலவியது. இதனைத் தொடர்ந்து போதுமான அளவிற்கு பூ மழை மற்றும் பின் மழை கோடை காலத்தில் கிடைக்க பெறவில்லை.  மேலும் நடப்பாண்டும் பெரு மளவு காபி விளையும் பகுதி களில் குறைந்த அளவே பருவ மழை  பெய்தது. இத்தகைய நிலை யில்லாத பருவ மழை பொழிவு நடப்பு பருவத்தில் நிலவி வருவது வெள்ளை தண்டு துளைப்பானின் தாக்கத்தை அதிகப்படுத்தும். முதிர்ந்த பூச்சிகள் குறிப்பிட்ட காலத் திற்கு முன்னதாக செப்டம்பர் மாதத்திலேயே தண்டை விட்டு வெளியே வர தொடங்கும். எனவே அரேபிகா காபி விவசாயிகள் சில  மேலாண்மை முறைகளை பின் பற்ற வேண்டும். ஆகஸ்டு மாத இறுதிக்குள் தண்டு துளைப்பானால் பாதிக் கப்பட்ட செடிகளை கண்டறிந்து வேறுடன் பிடுங்கி, தீயிலிட்டோ அல்லது தண்ணீருக்குள் 10  நாட்கள் மூழ்கடித்தால், தண்டு துளைப்பான் பூச்சியின் அனைத்து  பருவங்களையும் கட்டுப்படுத்த லாம். வெள்ளை தண்டு துளைப் பானின் தாக்குதலுக்குள்ளான செடிகளை கண்டறிதலின் போது  சில செடிகள் பூச்சியின் பாதிப்பிற் கான அறிகுறிகள் குறைந்தும், அதிக மான மகசூலுடனும் காணப்படும். அச்செடிகளின் முதன்மை வாது களை சாக்குப்பைகளை அல்லது துணிகளை ரிப்பன் போல கட்ட வேண்டும். மேலும் ஒரு பேரல் தண்ணீரில் குளேரே பைரிபாஸ் 50 ஈசி மற்றும் சைபர் மெத்ரின் 50 ஈசி ஆகியவற்றை 240 மில்லி அளவு கலந்து 200 மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு முன்னர் தெளிக்க வேண்டும். எஞ்சிய ஆரோக்கியமான செடிகளை பாது காக்க, அதன் மைய தண்டு அல்லது  முதன்மை வாதுகளில் 10 சதவீத சுண்ணாம்பு கரைசலை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் பூச வேண்டும். இது ஓராண்டு வரை பூச்சியின் தாக்குதலில் இருந்து செடிகளை காக்கும். மருந்துகளை இலை மற்றும் காப்பி பழங்களின் மீது படாமல் தண்டுகளுக்கு மட்டுமே தெளிக்க வேண்டும். இயல்பான பருவமழை உள்ள பகுதிகளில் பூச்சியின் தாக்கு தலை கண்டறிதல், சுண்ணாம்பு கரைசல் பூசுதல், பூச்சி கொல்லி  மருந்து தெளித்தல் உள்ளிட்ட வற்றை அக்டோபர் மாதம் 15ஆ ம்  தேதிக்குள் செய்ய வேண்டும். கவனிப்பாரற்று கிடக்கும் செடிகள்  மற்றும் நோய் தாக்குதலுக்குள்ளான செடிகளுக்கு அருகில் உள்ள செடி களை தென்னை நார் கையுறை கொண்டு பட்டை தேய்த்து விடுதல் சிறந்த வழிமுறையாகும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

;