tamilnadu

img

வாக்காளர் உதவி மைய மொபைல் செயலி குறித்த விழிப்புணர்வு

ஏற்காடு, செப்.12- ஏற்காட்டில் வாக்காளர்  உதவி மைய மொபைல் செயலி குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.  சேலம் மாவட்டம் ஏற் காட்டில், வருவாய் துறை சார்பில் வாக்காளர் உதவி மைய மொபைல் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்வு வியாழனன்று காந்தி பூங்கா, பேருந்து நிலையம், ஒண்டிக் கடை உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்றது. இந்நிகழ்வில் ஏற்காடு வட்டாட்சியர் முருகேசன் கலந்து கொண்டு  விளக்கவுரையாற்றினார். இதில் ஆண்ட்ராய்டு மொபைல்கள் மூலம் வாக் காளர் உதவி மைய செயலியை பதி விறக்கம் செய்து வாக்காளர் அடையாள அட்டைகளில் உள்ள விபரங்களை சரி பார்க்கலாம். மேலும் திருத்தம் செய்து கொள்ளலாம். ஒரே குடும்பத்தை சேர்ந்த வர்களை பட்டியலில் ஒரே வரிசையில்  மாற்றலாம் எனவும், புதிய வாக்காளருக் காக விண்ணப்பிக்கலாம் எனவும்  வட்டாட் சியர் முருகேசன் தெரிவித்தார். இதுகுறித்து துண்டு பிரசுரங்கள் பொது மக்களிடம்  விநியோகம் செய்யப்பட்டன.

;