tamilnadu

img

மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் குறித்த முத்தரப்பு கூட்டம்: எந்த முடிவும் எடுக்காத மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அதிருப்தி

சேலம், அக்.31- மரவள்ளி கிழங்கு விலை மற்றும் விற்பனை நிலை குறித்த முத்தரப்பு ஆலோசனை கூட்டத்தில் எவ்வித தீர்வும் எட்டப்படாததற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் அதி ருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் பொன்னுசாமி கூறுகை யில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், மரவள்ளி கிழங்கு விலை மற்றும் விற்பனை நிலை குறித்த முத்தரப்பு ஆலோ சனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.அ ராமன் தலைமையில் நடை பெற்றது. இதில் விவசாய சங்கங்க ளின் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு, நியாய விலைக் கடைகளில் ஜவ்வரிசி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜவ்வரிசி ஆலைகளில் கலப்படம் செய்யாமல் இருக்க கண்காணிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண் டும்.

விவசாயிகளுக்கு மரவள்ளி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித் தும், மதிப்பு கூட்டு பொருட்கள் தயா ரிப்பது குறித்தும் உரிய பயிற்சி வழங்க வேண்டும்.  மரவள்ளிக் கிழங்கில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண் டும். கூட்டுறவு ஆலைகள் மூலம் ஜவ்வரிசி உற்பத்தி செய்ய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். மரவள்ளிக்கான விலையை ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும். மரவள்ளி ஸ்டார்ச் அளவிடும் கருவி மரவள்ளி பயிரிடும் கிராமங்களில் ஆங்காங்கே வைக்க வேண்டும் என பல்வேறு கருத்துகளை கோரிக்கையாக தெரிவித்தனர்.

 மேற்கண்ட அனைத்து கருத்து களையும் கேட்ட மாவட்ட நிர்வா கம் முழுமையான எந்த நடவடிக் கையும் எடுக்காமல், விவசாய பிரதி நிதிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என கூறி முத்த ரப்பு கூட்டத்தை முடித்தது. இது மிக வும் கண்டனத்துக்குறியது. ஒரு முழு மையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்காமல் இப்படி தட்டி கழிப்பது அதிருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.