சேலம், பிப்.12- ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணம் செய்த 4086 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் தெரிவித்தார். சேலம் ரயில்வே கோட் டத்திற்குட்பட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில், டிக் கெட் இன்றிபயணிப் போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கோட்ட மேலாளர் சுப்பா ராவுக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து, கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் கடந்த மாதம் சேலம் வழியாக சென்ற எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்களில் டிக்கெட் பரி சோதனை மேற்கொண்டனர். இந்த சோத னையில், டிக்கெட் இன்றி பயணம் செய்த 4086 பேர் சிக்கினர். இவர்களிடம் இருந்து ரூ.18.94 லட்சம் அபராதம் வசூலிக்கப் பட்டது. இதுகுறித்து சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறு கையில், ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தண்டனைக்குரியது. அவர் களிடமிருந்து இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.