tamilnadu

img

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் போதிய அடிப்படை வசதி இல்லை என சுற்றுலா பயணிகள் வேதனை

சேலம், மே 12-ஏற்காடு சுற்றுலா தளத்தின் அடுத்த பகுதியாக விளங்கும் சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்து ரசித்த சுற்றுலா பயணிகள், போதிய குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சரியான பராமரிப்பு இல்லை என வேதனை தெரிவித்தனர்.சேலம் மாவட்டம், ஏற்காடு மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவானது 1981 ஆம் ஆண்டு 11ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இந்த பூங்கா தற்போது 71.37 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டு விலங்குகள்எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் வெள்ளை மயில்கள் தோகை விரித்து நடனமாடி மகிழும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடனும் வியப்புடனும் பார்த்து செல்கின்றனர். மேலும் புள்ளிமான்கள், யானைகள், முதலைகள், பாம்புகள், கடல் மான், ஆமை, குள்ளநரி, வங்காநரி, நீர்பறவை, பறவைகள் இந்த உயிரியல் பூங்காவில் இருக்கின்றது.இதனை, உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்களின் குடும்பங்களுடன் வந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். மேலும் இந்த உயிரியல் பூங்காவில் முதியவர்கள் சுற்றிப் பார்ப்பதற்காக பேட்டரி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயிரியல் பூங்காவிற்கு அனைத்து தரப்பு மக்களும் தங்களின் குடும்பங்களுடன் சென்று கோடைவிடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு போதிய குடிநீர் வசதியும் போதிய கழிப்பிட வசதியும் செய்து தரப்படாமலும் போதிய பராமரிப்பின்றியும் உள்ளது என சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் இங்கு உள்ள காலி இடங்களில் இன்னும் பல விலங்குகளை அதிகப்படுத்தி வண்டலூர்பூங்காவை போன்று விரிவுபடுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

எழில்.