இளம்பிள்ளை, ஜூலை 11- இளம்பிள்ளையில் கோயில் உண்டியலை உடைத்த மர்ம நபர்களை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த புவன கணபதி கோயில் அருகில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வியாழனன்று உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்த னர். அப்போது அங்கிருந்த மர்மநபர்கள் தப்பிக்க முயன்ற தையடுத்து அவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து மகுடஞ்சாவடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த னர்.
இதையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில் கொண்டலாம்பட்டி பெரிய புத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிபாரதி (32), இடங்கண சாலை மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (32), தூதனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (27) ஆகி யோர் என தெரியவந்தது. மேலும், இளம்பிள்ளை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் இரவு நேரங் களில் காவல் துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்ப டுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.