tamilnadu

img

ஏரிக்கரையோரத்தில் தனியார் விடுதியினர் போர்வெல் அமைக்கும் பணி பொதுமக்கள் எதிர்ப்பு

ஏற்காடு, ஆக.24- ஏற்காட்டில், ஏரிக் கரையோரத்தில் தனியார் விடுதியை சேர்ந்தவர்கள் போர்வெல் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் மாவட்டம், ஏற்காடு டவுன் பகுதியில் அமைந்துள்ளது அலங்கார ஏரி. இந்த ஏரியில் சேறும், ஆகாயத்தாமரை நிரம்பியிருந்த நிலையில், கடந்த 2017  ஆம் ஆண்டு ஏற்காடு பகுதி இளைஞர்கள் தூர்வாரி சுத்தம் செய்தனர். இந்த ஏரியில்  இருந்து ஏற்காடு டவுன், கடைவீதி, பேருந்து  நிலைய கழிப்பிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும், ஏற்காடு ஒன்றிய நிர்வாகம் சார்பில்  ஏரிக்கரையில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏற்காட்டில் குடிநீர் பஞ்சம் நிலவி வந்ததையடுத்து, கடந்த ஜூன் 1 தேதியன்று ஏற்காடு படகு இல்ல ஏரி கரையில், தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கிணறு மற்றும் போர்வெல்களில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசந்தர் தடை விதித்திருந்தார். மேலும் அங்கு தண்ணீர் எடுக்க பயன் படுத்திய மின் மோட்டார்களையும் பறி முதல் செய்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 27 தேதி யன்று ஏற்காடு அலங்கார ஏரி கரையை ஒட்டி உள்ள ஜி.வி.எஸ். தங்கும் விடுதியினர் போர்வெல் அமைக்க பணியில் ஈடு பட்டனர். இதையறிந்த பொதுமக்கள் ஏரிக் கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்  போர்வெல் அமைக்க எதிர்ப்பு தெரிவித் தனர். மேலும் முற்றுகை போராட்டத்திலும்  ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன், பொது மக்களை சமாதானம் செய்தார். மேலும் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மேலும் போர்வெல் அமைக்கப்படாது என உத்தரவாதம் அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் வியாழனன்று இரவு 12  மணியளவில், சேலம் காவல் துணை கண் காணிப்பாளர் உமாசங்கர், ஏற்காடு ஆய் வாளர் ஆனந்தன் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்புடன் போர்வெல் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. அப் போது ஏற்காடு பகுதியை சேர்ந்த பொது மக்கள் போர்வெல் அமைக்க எதிர்ப்பு  தெரிவித்தனர். இதனால் பொதுமக்க ளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதையடுத்து காவல் துணை கண் காணிப்பாளர் உமாசங்கர், தங்கும் விடுதி  உரிமையாளர் ஏற்கெனவே அமைக்கப் பட்ட போர்வெல்லை சீரமைத்து ஆழப் படுத்த அரசு அனுமதி வாங்கியுள்ளார். எனவே, போர்வெல் அமைப்பதை தடுக்கக் கூடாது என கூறியதையடுத்து, சட்ட ரீதியாக இப்பிரச்சனையை அணுகப் போவதாக கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.