tamilnadu

img

குழந்தையை கடத்திய பெண்ணை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்

சேலம், மே 14-சேலத்தில் பட்டப்பகலில் குழந்தையை கடத்திய பெண்னை பிடித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர்.சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி பகுதியில்உள்ள ஜான்சன் பேட்டையில் செவ்வாயன்று காலையில் அப்பகுதியை சேர்ந்த ஜஸ்டின், மகாலட்சுமி தம்பதியினரின் மகன் சரவணன் (3) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து சரவணனை தூக்கி கொண்டு ஓடினார். இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் சத்தமிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிய பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர். அந்தப் பெண்ணிடம் இருந்து சிறுவனை மீட்டு பெற்றோரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.பின்பு குழந்தை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட அந்த பெண்ணை சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர். அந்தப் பெண் தனது பெயர் சாந்தி என்றும், விஜயா என்றும் திருப்பூரை சேர்ந்தவர் என்றும், கோவையை சேர்ந்தவர் என்று மாறி மாறி கூறினார். இந்த நிலையில் சேலம் மாநகர துணை ஆணையாளர் சியமலாதேவி, அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழந்தை கடத்தல் சம்பவத்தால் அப்பகுதி மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

;