tamilnadu

img

பாஜக அரசு அனைத்து துறைகளிலும் படுதோல்வி மூடி மறைக்கவே குடியுரிமை திருத்த சட்டம்

சேலம், மார்ச் 1- பாஜக அரசு அனைத்து துறைகளி லும் படுதோல்வி அடைந்ததை மூடி மறைக்கவே குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை   நிறைவேற்றியுள்ளது என  செய்தியா ளர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள் ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் இஸ்லாமிய பெண்கள் 14 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலா ளர் இரா.முத்தரசன் மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இரா.முத்தரசன் கூறியதாவது, பாஜக அரசு அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்ததை மூடி மறைக் கவே குடியுரிமை திருத்த சட்டம், என்பி ஆர், என் ஆர் சி போன்றவற்றைக் கொண்டு வந்துள்ளது. மேலும் அரசிய லமைப்பு சட்டத்தை கெடுக்கும் வகை யிலேயே பாஜக அரசு செயல்பட்டு வரு கிறது. மேலும் நீதிமன்றம், வருமான வரித்துறை உள்ளிட்ட அனைத்தை யும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, குஜராத் போன்று டெல்லியிலும் மத கலவ ரத்தை தூண்டி, கொடிய வன்முறையை ஏற்படுத்தியது. மேலும், டெல்லியை போன்று தமிழகத்திலும் கொலை வெறித்தாக்குதல் நடக்கும் என பகிரங் கமாக அறிவித்துள்ள ஹெச்.ராஜா மீது தமிழக முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக முதல் வர் அஞ்சுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.  செய்தியாளர்கள் சந்திப்பின் போது மே 17 இயக்க ஒருங்கிணைப்பா ளர் திருமுருகன் காந்தி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் எ.மோகன் ஆகியோர் உட னிருந்தனர்.