tamilnadu

img

கொரோனா விதிமுறையைப் பின்பற்றவில்லையென ஜவுளிக்கடை முன்பு குப்பைகளை கொட்டிய பேரூராட்சி ஊழியர்கள்

இளம்பிள்ளை, செப். 24- இளம்பிள்ளையில் கொரோனா விதி முறைகளை பின்பற்றவில்லை என ஜவுளிக் கடை முன்பு பேரூராட்சி நிர்வாகத்தினர் குப் பையை கொட்டிய சம்பவம் அப்பகுதி வியா பாரிகளிடம் பெரும் அதிருப்தியை ஏற்ப டுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசைத்தறித் தொழில் பிரதானமாக நடைபெற்று வருகி றது. கொரோனா நோய்த்தொற்று பொது முடக்கம் காரணமாக கடந்த ஆறு மாத கால மாக ஜவுளி வியாபாரிகள் கடும் நெருக்கடி யில் இருந்து வருகின்றனர். இச்சூழலில் இளம்பிள்ளை பேரூராட்சி நிர்வாகத்தினர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து வரு கின்றனர்.  

இந்நிலையில், இளம்பிள்ளை கே.வி.பி  தியேட்டர் சாலையில் உள்ள ஒரு சிறு ஜவுளி விற்பனை கடைக்கு வந்த பேரூராட்சி ஊழி யர்கள் தனி மனித இடைவெளியைப் பின் பற்றவில்லை எனக்கூறி ரூ.500 அபராதம் கட்டவேண்டும் என தெரிவித்ததாக கூறப் படுகிறது. இதற்கு கடை உரிமையாளர் நான் ஒருவர் மட்டும் கடையில் இருக்கும் நிலை யில் அபராதம் ஏன் கட்ட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திர மடைந்த பேரூராட்சி ஊழியர்கள் அவர்கள் கொண்டு வந்த குப்பையை கடையின் முன்பு கொட்டிவிட்டுச் சென்று சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத் துறையினரும் தனித்தனியாக வந்து கொரோனா நடைமுறைகளை பின் பற்றவில்லை எனக்கூறி கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மற்றும் கொரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணத்தால் வியாபாரம் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், தினந்தோறும் ரூ.200 முதல் 500 வரை அபராதம் என்கிற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபடுவது எங்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. இதுகுறித்து உயரதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.