tamilnadu

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

இளம்பிள்ளை, நவ.15-  இளம்பிள்ளை அருகே இளம் பெண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத் தியுள்ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகேயுள்ள காளியம்மன் கோவில் தெரு மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்  விசைத்தறி மேஸ்திரி மோகன் என்பவரது மனைவி கோகிலா (31). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நி லையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இத னால் கணவர் கோவித்துக் கொண்டு வெளியே சென்று விட தீபாவளி நாளான சனியன்று வீட்டில் தனியாக இருந்த கோகிலா  தூக்கிட்டு தற்கொலை செய்துள் ளார். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த போலீசார், கோகி லாவின் உடலை கைப்பற்றி சேலம் அரசு  மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து  வழக்கு பதிவு செய்த போலீசார், பல்வேறு  கோணத்தில் தீவிர விசாரணை மேற் கொண்டு  வருகின்றனர்.