tamilnadu

img

தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்

சேலம், நவ.9- தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும்  முகாமில் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம்  மாவட்டம் கொங்கணாபுரத்தில் நடை பெற்றது  சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு  ரூ.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார். மேலும், கட்டுமான பணி களை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் முதல்வர் பேசியதாவது, தமிழகம் முழு வதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளி லிருந்து 9 லட்சம் மனுக்கள் பெறப் பட்டன. அதில், 5 லட்சம் மனுக்கள் ஏற்கப் பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட மனுக்களை மறு ஆய்வு செய்து மக்களுக்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது தமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியோருக்கு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல மனுக்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு உள்ள காரணத்தினால் முதியோர் உதவித் தொகை கோரிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. முதி யோர் நலன் கருதியும், கால சூழலை கருதி யும்  ரூ.1 லட்சம்  வரை சொத்து மதிப்பீடு  உள்ளவர்களுக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கவும் உத்தரவிடப்பட் டுள்ளது என்றார்.