districts

ஜூலை 9 திருவாரூரில் ரேசன்கடை சிறப்பு குறைதீர் முகாம்

திருவாரூர், ஜூலை 6- திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்  தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கு வதன் பொருட்டு ஜூலை-9 அன்று காலை 10 மணியளவில் வட்ட அளவில் கீழ்க்காணும் நியாய விலைக்கடைகள் தொடர்பான பொதுமக்கள் கோரிக்கைகளை பெற அந் தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இக்குறைதீர் முகாம், திருவாரூர் வட்டத்தில் அர சவனங்காடு கிராமத்தில் வருவாய்க்கோட்டஅலுவலர் தலைமையிலும், நன்னிலம் வட்டத்தில் முடிகொண்டான் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு அலுவலர் தலைமையிலும், குடவாசல் வட்டத்தில் மஞ்சக்குடி கிராமத்தில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளர்-மேலாண்மை இயக்கு னர் தலைமையிலும், வலங்கைமான் வட்டத்தில் சந்திர சேகரபுரம் கிராமத்தில் திருவாரூர் சரக துணைப் பதிவா ளர் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டம் கோவில் வெண்ணி கிராமத்தில் கூட்டுறவுசங்கங்களின் இணைப்  பதிவாளர் தலைமையிலும், மன்னார்குடி வட்டத்தில் பாலையூர் கிராமத்தில் மன்னார்குடி வருவாய்க் கோட்ட அலுவலர்; தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஓவரூர் கிராமத்தில் முதுநிலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் தலை மையிலும், கூத்தாநல்லூர் வட்டத்தில் சித்திரையூர் கிரா மத்தில் மன்னார்குடி சரக துணைப் பதிவாளர் தலை மையிலும் நடைபெற உள்ளது. எனவே, தொடர்புடைய பகுதிகளைச் சேர்ந்த பொது விநியோகத்திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்தும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல்,  திருத்தம் போன்றவைகள் குறித்தும், புதிய மற்றும் நகல்  அட்டை கோரும் மனுக்கள் கைபேசி எண் பதிவு மற்றும்  மாற்றம் செயல்தலுக்கான தனியாக கோரிக்கை மனுக்கள்  அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள்  மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்தும் கோரிக்கை மனுக்களை ஜூலை 9 அன்று நடைபெறவுள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேற்காணும் அலுவலர்களிடம் அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.