ஏற்காடு, அக். 29- கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் தற் போது மீண்டும் ஏற்காட் டிற்கு பேருந்து இயக்கம் துவங்கியதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணி கர்கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். கொரோனா பொது முடக்கத்தால் தமிழகம் முழு வதும் பொது போக்குவ ரத்து தடை செய்யப்பட் டது. இதன்பின் பொது முடக்கத்தில் பல்வேறு தளர் வுகள் அளிக்கப்பட்ட போதும், ஏற்காட்டிற்கு மட் டும் பேருந்துகள் இயக்கப் படாமல் இருந்து வந்தன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளான தால், ஏற்காட்டிற்கு பேருந் துகள் இயக்கப்பட வேண் டும் என அரசியல் கட்சியி னர் மற்றும் தோட்ட தொழி லாளர் சங்கங்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தன. இந் நிலையில் புதனன்று சேலத் தில் இருந்து ஏற்காட்டிற்கு மூன்று அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. 4 மாதங்க ளுக்கு பின்னர் ஏற்காட் டிற்கு பேருந்துகள் இயக்கப் பட்டதால் அப்பகுதி பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்த னர்.