tamilnadu

சாலை விபத்தில் சிறப்பு காவல் படை காவலர் பலி

இளம்பிள்ளை, ஆக. 25- ஆட்டையாம்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத் தில் சிறப்பு காவல் படை காவ லர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோத கத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆட் டையாம்பட்டி அருகே உள்ள ரத்தினவேல் கவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி வர்மன் (32). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு அகிலா (27 ) என்ற மனை வியும், முகுந்தன் (7) என்ற மகனும், சிந்துஜா என்ற ஆறு மாதக் குழந்தையும் உள்ள னர்.

இந்நிலையில், இவர் கடந்த ஆக.20ஆம் தேதி யன்று பணி முடிந்து ராசி புரம் செல்லும் சாலையில் உள்ள ஆத்துபிள்ளையார் கோவில் பாலம் அருகே வரும்பொழுது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாக னம் மோதியதில் அவர் படு காயமடைந்தார். இதைய டுத்து அவரை அக்கம், பக்கத் தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில் திங்களன்று சிகிச்சைப் பல னின்றி அவர் உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து ஆட் டையாம்பட்டி காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;