tamilnadu

மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்

சேலம், ஜன. 29- சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் வெள்ளியன்று நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரி வித்துள்ளதாவது. சேலம் மாவட்ட ஆட்சியர் தலை மையில் ஜன.31ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அறை எண்.11 ல் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இம்முகா மில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கி ணைந்து மாற்றுத்திறனாளிகளிகளுக்கான உரிய நட வடிக்கை எடுத்து தீர்வு காண உள்ளனர். எனவே, சேலம் மாவட்டத்தை சார்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் தங்களது கோரிக்கை மனுக்களுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றி தழ் நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படத்துடன் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து உரிய உதவிகள் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

;