சேலம், பிப். 4- குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை கண்டித்து பொதுமக்களிடையே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிக ளின் சார்பில் கையெழுத்து இயக் கம் நடைபெற்றது. சேலம் முக்கோணம் பகுதியில் சிபிஎம் சேலம் மேற்கு மாநகர கமிட்டி சார்பில் கையெழுத்து இயக் கம் நடைபெற்றது. இதில், சேலம் மேற்கு மாநகர செயலாளர் எம்.கனக ராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ராம மூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் எம். குணசேகரன், ஐ.ஞானசெளந் தரி, மாவட்டக்குழு உறுப்பினர் பி. பாலகிருஷ்ணன், மேற்கு கமிட்டி உறுப்பினர்கள் பி.கணேசன், வி. பிரகாஷ், திமுக மாநகர செயலாளர் ஜெயபிரகாஷ், காங்கிரஸ் கட்சி யின் மாவட்டத் தலைவர் ஜெயபிர காஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளை செயலா ளர்கள், சிஐடியு சுமை தூக்கும் தொழி லாளர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். மேலும், குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதி வேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதி வேடு உள்ளிட்ட சட்ட திருத்தங் களை திரும்ப பெற வேண்டும் என்று பதிவிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி கையெழுத்து பெற்றனர்