tamilnadu

img

சேலம்: குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

சேலம், ஜூன் 10- குடிநீர் கேட்டு சேலம் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அம்மாபேட்டை பகுதிக்குட் பட்ட ராமநாதபுரம், நாகமலை, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இந்த பகுதி மக்களுக்காக ஆழ் துளை கிணறு மூலம் மின் மோட்டார் வைத்து நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக நீர்மூழ்கி மோட்டார் பழுதடைந்துள்ளதால், குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அம்மா பேட்டை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நட வடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த  50க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங் களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, உடனடியாக தண்ணீர் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த அம்மாபேட்டை காவல்துறையினர் மற்றும் சேலம் மாநகராட்சி செயற்பொறி யாளர்கள் பேச்சுவார்த்தை நடத்னர். இதில் குடிநீர் கிடைக்க வழிவகை செய்வ தாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை  அடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் சேலம் அம்மாபேட்டை பிரதான சாலை சிறிது  நேரம் பரபரப்பாக காணப்பட்டது.