சேலம், மே 18-சேலம் செவ்வாய் பேட்டை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது ரூ.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினரை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமானரோகினி நியமித்த வாகன தணிக்கை குழுவினர் சோதனையில் கடந்தஇரண்டு மாதங்களாக ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மே 27ஆம் தேதி வரை நீடிக்கும்என தலைமை தேர்தல் அதிகாரிஅறிவித்ததன் அடிப்படையில் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் சனியன்று அதிகாலை 3 மணி அளவில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செவ்வாய் பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த டீத்தூள் மொத்தவியாபாரி மகேந்திர குமார் என்பவர்உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துவந்த ரூ.49 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோட்டாட்சியர் செழியனிடம் ஒப்படைத்தனர். பின்பு தேர்தல் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான ரோகினி ஆலோசனைப்படி இந்த பணத்தைமாவட்ட கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.