tamilnadu

img

சாலை வசதி கேட்டு முதல்வர் தொகுதியில் பொதுமக்கள் சாலை மறியல்

சேலம், ஆக.19 - தமிழக முதல்வரின் தொகுதியான எடப்பாடியில் சாலை  வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகாவில் திருமாலூர்  முதல் சமுத்திரம் வரை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை. இப்பி ரச்சனை சம்மந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் பொது மக்கள் எடுத்துரைத்தும், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த பொது மக்கள் திருமாலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

இதில் அதிமுக சின்னையன், மார்க்சிஸ்ட் கட்சி யின் எடப்பாடி தாலுகா செயலாளர் மு.பெரியண்ணன், பாமகவின் எம்.காவேரி, திமுக ஏழுமலை, சமுத்திரம், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கனகராஜ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மற்றும் இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதன்பின் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியில் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடு பட்டது அப்ப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.