ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் அபாயத்தை விளக்கி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் சங்க தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுப்பள்ளி கல்விக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பங்கேற்று, தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து உரை யாற்றினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட திராளனோர் கலந்து கொண்டனர்.